ஸ்தல வரலாறு:
அகஸ்தியரின் கமண்டலத்து நீரை விநாயகர் தட்டி விட்டதால் அவருக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க, இங்குள்ள குளத்து நீரில் நீராடி, இவ்விறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். இதனை பொன்செய் என்பர். இதுவே நாளடைவில் மருவி புஞ்சை என்றானது.
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் தாயார் பகவதி அம்மையார் பிறந்த ஸ்தலம்.
அவரது தந்தையாரான சிவபாத இருதயர் தோளின் மீது அமர்ந்தபடி சம்பந்தர் பதிகம் பாடினார்.
பாலை நெய்தல் பாடியதும் பாலையாக இருந்த நிலங்கள் நெய்தலாக (விளை நிலங்களாக) மாறியது.
அகஸ்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய ஸ்தலம்.
திருஞான சம்பந்தரின் தாயார் பிறந்த ஊர்.