இவ்விறைவனின் பக்தையான ஒரு பெண்ணை, ஊரார் அவமானப்படுத்தி தண்டிக்கின்றனர். அறியாமல் தான் செய்த சிறு பிழைக்கு, இவ்வளவு கொடும் தண்டனையளித்த இவ்வூர் மண்மேடாகட்டும் என அப்பெண் சாபம் கொடுத்துவிட்டாள். மணல்புயல் உருவெடுத்து ஊரையே மண்மேடாக்கியது.
பல காலம் கழித்து மணல்மேட்டை அகழ்ந்தபோது அதனடியில் இருந்த கோவில் தென்பட்டது. அதை முழுமையாக வெளிக் கொணர்ந்தனர். புதையுண்டிருந்த கருவறையில் இருந்த சிவலிங்கத் திருமேனிக்கு சாத்தப்பட்டிருந்த மலர்கள் வாடாமலேயே இருந்தனவாம். இதனால் இவ்விறைவனை பூவேந்தியநாதர் என்று அழைக்கின்றனர்.