நேத்திரபாதர் எனப்படும் நயன ரிஷி இத்தலத்திற்கு வந்து ஸ்ரீ வரதராஜரைக் குறித்து தவம் செய்து பரம்பொருளுடன்
ஐக்கியமாகி விட்டார். இதனால் இத்தலம் நயனகிரி என்ற பெயரைக் கொண்டது.
இத்தலத்திலுள்ள பத்ம தீர்த்தத்தின் தாமரை மலரில் குழந்தையாக அவதரித்த மகாலட்சுமியை எடுத்து வளர்த்து
வந்தார் பிருகு முனிவர். குவலயவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமணப் பருவம் வந்ததும் நாராயணனை
மணந்து கொண்டாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இங்கு தவம் செய்து கொண்டிருந்த விஷ்ணுதாசருக்கு தண்டன் எனும் அசுரன் தீங்கிழைத்தான். இதன் காரணமாக
கோபம் கொண்ட விஷ்ணுதாசர், நயன மலையில் தவம் செய்பவர்களுக்கு யார் கெடுதி செய்தாலும் அவர்கள்
கற்பாறைகளாக மாறக் கடவது என சபித்தார்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் வீடுகளில் மாவிளக்கு போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.