சுந்தரர் தமது தொண்டர்களுடன் இத்தலம் நோக்கி வரும்போது வெயிலின் கடுமையாலும், பசியைத் தாங்கமாட்டாமலும் கஷ்டப்பட்டார். அவரது துன்பத்தைப் போக்க எண்ணிய சிவபெருமான், வேதியர் வடிவில் வந்து, வழியில் குளிர்ந்த நீர் பந்தல் ஒன்றை அமைத்தார். பொதி சோறும், தண்ணீரும் வைத்துக் கொண்டு காத்திருந்தார். சுந்தரருக்கு அளித்த பொதிசோறு எடுக்க எடுக்க குறையாமல் பெருகியது.
இதைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், உடன் வந்தவர்களுடன் பொதி சோற்றை உண்டு, தண்ணீர் பருகி, களைப்பால் உறங்கினார். விழித்தெழுந்து பார்த்தால் வந்திருந்த வேதியரும், நீர் பந்தலும் மறைந்து விட்டன. பின்னர் வேட வடிவில் காட்சி தந்து, சுந்தரருக்கு வழிகாட்டி விட்டு, கோவிலுக்குள் சென்று மறைந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஆலய முகப்பில் சிவபெருமான் சுந்தரருக்கு உணவு படைப்பதை சுதை சிற்பமாக வடித்துள்ளனர். சுந்தரருக்கு பொதி சோறு அளித்த இடம் இங்கிருந்து 1.5 கி.மீ தூரத்திலுள்ள வரிசைப்பற்று எனும் ஊரும், இடமணல் எனும் ஊரும் இருப்பதைக் காணலாம்.
தை அமாவாசையன்று தீர்த்தவாரி நடைபெறுகையில் ஆலயத்துக் கிணற்று நீர் பால் போல மாறி விடுகிறது.
சுந்தரருக்கு சிவபெருமான் கட்டுச்சோறு அளிப்பதை சித்ரா பௌர்ணமியன்று ஐதீகமாக கொண்டாடுகின்றனர்.
தேவாரத் திருத்தலம்.