ராவணனின் ஒன்றுவிட்ட சகோதரரான கரன் மற்றும் அவனது மற்ற சகோதரர்கள், தாரகாசுரன் போன்ற அசுரர்களின் கொடுமைக்கு உள்ளான தேவர்கள் மிகுந்த துன்பமடைந்து இவ்விறைவனிடம் முறையிட்டு வழிபட்டு வந்தார்கள்.
கரனுக்குத் தெரியாமலிருக்க, எறும்பு வடிவம் கொண்டு தேவர்கள் இங்கு இறைவனைப் பூஜித்து வந்தனர். இதனால் இறைவனுக்கு எறும்பீஸ்வரர் என்ற திருநாமம்.
லிங்கத் திருமேனியில் எண்ணெய் பசை இருப்பதால் எறும்புகளால் மேலேறி வந்து பூஜை செய்ய முடியாதே என்று தனது திருமேனியை சொரசொரப்பாக புற்று வடிவத்தில் மாற்றிக் கொண்டார் இறைவன். எறும்புகள் ஏறுவதற்கு வசதியாக திருமேனியை சாய்வாக வைத்துக் கொண்டார். லிங்கத்திருமேனி மீது எறும்புகள் ஊர்ந்து சென்றதால் உண்டான தடயங்களாக திருமேனி பள்ள மேடுகளுடன் சாய்ந்து காணப்படுகிறது.
அகஸ்தியருக்கு முருகன் ஞான உபதேசம் செய்த ஸ்தலம்.
150 அடி உயரமுள்ள சிறிய குன்றின் மீது 90 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். ஆதித்ய சோழன் கட்டிய கோவில் எனக் கூறப்படுகிறது.