அகலிகையை அடைய இந்திரன் கையாண்ட வழிகளுக்காகவும், அவனது தீய புத்திக்கு பாடம் புகட்டவும், கௌதம ரிஷி கொடுத்த சாபத்தினால், உடம்பெல்லாம் ஆயிரங் கண்கள் பெற்ற தேவேந்திரன், இத்தலம் வந்து தவமிருந்து, இவ்விறைவனை வழிபட்டு, சாப விமோசனம் பெற்றான் என ஸ்தல வரலாறு.
இந்திரனின் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், அவன் கொண்டிருந்த ஆயிரம் கண்களையும், தாமே ஏற்றுக் கொண்டு, அவனுக்கு சாப விமோசனம் தந்தமையால், ஸ்வாமி திருக்கண்ணாயிரமுடையார் எனப் பெயர் கொண்டார்.
வாமனர் வடிவில் மாபலியிடம் போகும் முன் திருமால் இவ்விறைவனை வழிபட்டார். இதனால் குறுமாணக்குடி எனப் பெயர் கொண்டது.
தேவாரத்திருத்தலம்.