பாண்டவர்கள் ஐவரும் இலுப்பைப்பட்டில் லிங்கங்கள் அமைத்து வழிபட்டுக் கொண்டிருந்த சமயத்தில், இத்தலம் வழியே பயணித்த அர்ஜுணன் தாகத்தால் தவித்தான். அப்போது அவனது எதிரில், வயோதிகர் வடிவில் வந்த இறைவன், வாகை மரத்தடியில் நல்ல நீர் கிடைக்கும் என்று அர்ஜுணனிடம் கூறிவிட்டு அவனது கை வாளை வாங்கிக் கொண்டார். அவன் திரும்பி வருவதற்குள் வாளை அருகிலிருந்த புதர் ஒன்றில் ஒளித்து வைத்து விட்டு மறைந்தார். காவலாக வாசுகியை வைத்தார்.
பின்னர் அர்ஜுணன் பக்தி சிரத்தையுடன் வழிபட்டு, தொலைந்த வாள் மீண்டும் கிடைக்க வேண்டியதால் வாளை புதரிலிருந்து வெளிப்படுத்தினார். இதனால் இவ்வூர் வாள் ஒளி புற்றூர் எனப் பெயர் கொண்டது. புற்றில் இருந்தபடி வாசுகி வழிபட்டதால் ஸ்வாமிக்கு ஆபரணம் ஆகும் பேறு பெற்றது என ஸ்தல வரலாறு கூறுகிறது.