பாகசாதனன் என்ற பெயருடைய தேவேந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கு யாகசாலை அமைத்து யாகங்கள் பல செய்தான். இதனால் யாகசாலை எனப் பெயர் கொண்டு, பின்னர் மருவி பாகசாலை என்றானது.
கௌதம முனிவர் தந்த சாபத்தினால் மேனி முழுவதும் ஆயிரம் குறிகள் கொண்ட இந்திரன், இவ்விறைவனை வழிபட்டு ஆயிரம் குறிகளையும் ஆயிரம் கண்களாக மாற்றிக் கொண்டான்.
புரந்தரன் என்பது இந்திரனின் மற்றொரு பெயர். அவன் வழிபட்டதால் ஸ்வாமிக்கு புரந்தரேஸ்வரர் எனப் பெயர் வந்தது.