ஸ்தல வரலாறு:
சீதையை மீட்கப் புறப்பட்ட ராம-லக்ஷ்மணர்கள் இந்த கடற்கரை ஸ்தலத்தில் கோவில் கொண்டு அருள்புரியும் சிவபெருமானை வழிபட்டனர். பஞ்சாட்சர மந்திரத்தை பல கோடி முறை ஜபம் செய்து ருத்ராம்சம் பெற்றால், சிவ பக்தனான ராவணனை ஜெயிக்கலாம் என அகஸ்தியர் யோசனை கூறினார். அவ்வாறே ஸ்ரீ ராமர் செய்தார். சர்வதீர்த்தேஸ்வரர் பிரத்யட்சமாகி வெற்றி பெற ஆசிர்வதித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ராமர் நீராடிய கடல் பகுதி மற்றும் வருணன் உண்டாக்கிய வாருணி தீர்த்தம் உள்ள ஸ்தலம் இது. இங்கு கடலில் நீராடுவது விசேஷமாக கருதப்படுகிறது.