மூலவர் வெள்ளீஸ்வரர், அம்பாள் வேதாம்பிகை
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வெள்ளீஸ்வரர் சுயம்புலிங்க மூர்த்தம். அழகே உருவாக எழுந்தருளியிருக்கும் வேதாம்பிகை மிகுந்த வரபிரசாதி.
சுக்கிரன் வழிபட்ட இறைவன் என்பதால் வெள்ளீஸ்வரர் எனும் திருநாமம். மூலஸ்தானத்து விதானத்தில்
சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது.
விநாயகர், பாலமுருகன், மற்றும் சிவாலய கோஷ்டத்து மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக உள்ளன.
முன் மண்டப விதானத்தில் சூரிய-சந்திர கிரஹண காட்சி இடம் பெற்றுள்ளது.
அரச மரத்தடி மேடையில் ராஹு பகவானும் கேது பகவானும் எழுந்தருளியுள்ளனர். ராஹு-கேது தோஷம்
உள்ளவர்கள் ராஹு-கேது தசாபுக்தி நடப்பவர்கள் பிரார்த்தனைகளை செலுத்தி பரிகாரம் தேடிக்
கொள்கின்றனர். அரச மரத்தடியில் இருப்பதால் கர்ப்ப-சர்ப்ப தோஷங்கள் இருந்தால் விலகிவிடும் என்பர்.
இங்குள்ள ராஹு பகவான் திருநாகேஸ்வரத்தில் இருப்பது போலவே இருக்கின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.