அருள்மிகு கிருத்திவாகேசுவரர் திருக்கோவில் (சூலமங்கை - சூலமங்கலம்)

God Name : கிருத்திவாகேசுவரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

சப்த மாதர்களுள் ஒருவரான கௌமாரி தேவி வழிபட்ட ஸ்தலம் இது. சிவபெருமானின் சூல தரிசனம் பெற்றதால் இத்தலம் சூலமங்கை எனப் பெயர் பெற்றது. சாரதா நவராத்திரியின் மூன்றாவது நாள் அன்னை கௌமாரி இறைவனை வழிபட்டு சூல தரிசனம் பெற்றதாக ஒரு குறிப்பு கூறுகிறது. இந்த திரிதியை தினத்து இரவு இறைவனை வணங்குதல் கூடுதல் விசேஷம். தெய்வங்களுக்குரிய ஆயுதங்களைத் தயாரிப்பவர் அஸ்த்ரதேவர். இவர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். நமது கர்மாக்களை ஒழித்து நற்கதி வழங்குபவர் இவர். இவரை வழிபட்டால் மனதிலுள்ள துவேஷம் நீங்கி, ஸ்நேக உணர்வு பெருகும். இவர் இங்கு தவமிருந்து சிவபெருமானிடமிருந்து வரங்களைப் பெற்றவர். உற்சவங்கள் மற்றும் தீர்த்தவாரி சமயத்தில் தானே முதன்மையானவராக இருக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்றவர். இது ஒரு தேவார வைப்புத்தலம்.
மூலவர்: கிருத்திவாகேசுவரர், அம்பாள்: திரிபுரசுந்தரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக கிருத்திவாகேசுவரர் எழுந்தருளியுள்ளார். திரிபுரசுந்தரி அன்னை அவருடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். விசேஷ மூர்த்தியாக அஸ்த்ர தேவர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். சப்த மாதர்கள் பூஜித்த ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.