அருள்மிகு மஹாகணபதி திருக்கோவில் (கணபதி அக்ரஹாரம்)
God Name : ஸ்ரீ மஹா கணபதி
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பிள்ளையார் சதுர்த்தி தினத்தன்று இங்கு கூடி விடுவார்கள். யார் வீட்டிலும் சதுர்த்தி பூஜை செய்வதில்லை. எல்லோரும் ஒன்றாகக் கூடி கோவிலிலேயே கொண்டாடுகின்றனர். அவரவர் வீட்டில் கொழுக்கட்டை செய்து கொண்டு வந்து இங்கு வைத்து நைவேத்தியம் செய்கின்றனர். காஞ்சி மஹா பெரியவா சிறு வயதில் வாழ்ந்து விளையாடிய ஊர் இது. இல்லத்தில் இப்போது வேத பாடசாலை நடக்கின்றது. பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மனை சிறைப் பிடித்த முருகனிடமிருந்து அவரை விடுவிக்கப் புறப்பட்ட சிவபெருமானையும், பிரணவத்தின் பொருளைக் கூறுமாறு சொன்ன முருகன், தன்னிடம் உபதேசம் பெற வேண்டுமானால் தந்தை என்று வராமல், பரிவாரங்களுடன் வராமல், தனித்து சிஷ்யனாக வர வேண்டுமென கூறி விட்டான். அதன்படி தன்னுடைய பரிவாரங்களை ஒவ்வொரு இடமாக விட்டுச் சென்ற சிவபெருமான், விநாயகரை கணபதி அக்ரஹாரத்தில் விட்டு விட்டார் என்றும், கணபதி இங்கு கோவில் கொண்ட விபரத்தை ஸ்தல புராணம் விவரிக்கின்றது.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ மஹா கணபதி ராஜ கம்பீரமாக எழுந்தருளி அருள் புரிகின்றார். அகஸ்தியர் பிரதிஷ்டை செய்து, கௌதம ரிஷி பூஜித்த விநாயகப் பெருமான். வெளிப் பிரகாரத்தில் நெடிந்துயர்ந்த முருகனும், சிவசக்தி ஸ்வரூபமாக சிவலிங்கமும், ஆதிசங்கரர் திருவுருவமும், நவக்ரஹ கணபதி படமும் தரிசிக்கலாம். கோவிலின் முன்புறம் பிள்ளையார் குளம் இருக்கின்றது. ஆவணி மாதம் விநாயக சதுர்த்தி விழாவை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். முதல் வெள்ளிக்கிழமை மூஷிக வாஹனத்தில் ஸ்வாமி புறப்பாடு, அடுத்தடுத்து வரும் நாட்களில் காமதேனு, சிம்மம், ரிஷபம், யானை, சேஷ வாகனம், கற்பக விருட்சம் போன்ற புறப்பாடுகள் நடைபெறும். இரவு முழுவதும் நான்கு வேதங்களை பாராயணம் செய்வார்கள். ஹோமங்களுடன் விழா சிறப்பாக நடைபெறும். பங்குனி அனுஷத்தில் பால்குட விழா எனப்படும் ஆண்டு விழா நடைபெறும். ஆண்டுதோறும் பவித்ரோத்ஸவம் நடைபெறுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.