அருள்மிகு கோதண்ட ராமஸ்வாமி திருக்கோவில் (அரியலூர்)
God Name : ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி, வெங்கடேசப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
ராமநாதபுரம்
Call : +91-
ஹரி இருந்த ஊர் என்பதால் அரியலூர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக வெங்கடேசப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அலர்மேல் மங்காத் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி கம்பீரமாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். சீதா தேவியும் லட்சுமணனும் உடன் உள்ளனர். தாசானுபவத்தில் ஹனுமன் காட்சி தருகின்றார். மஹா மண்டபம் எனப்படும் தசாவதார மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் எழில் மிக்கவை. ஹயக்ரீவர் மற்றும் நரசிங்கப் பெருமாள் சிற்பங்கள் அரிதானவை. லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர், ஹிரண்யவத நரசிம்மர், ப்ரஹ்ஹலாத நரசிம்மர் என நான்கு வடிவங்களில் சேவை சாதிக்கும் ஸ்ரீ நரசிம்மரின் வடிவங்கள் அற்புதமானவை. ஒவ்வொரு சிற்பத்திற்கும் வஸ்திரம் அணிவித்து, பெயர்பலகையில் பெயரை எழுதி வைத்துள்ளனர். கோவிலை தூய்மையாக வைத்துள்ளனர். நித்ய பூஜைகளை சிரத்தையாக செய்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.