அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் (தவளகிரி)

God Name : பாலதண்டாயுதபாணி

தண்டாயுதபாணி கோவில்

நாகப்பட்டினம்

Call : +91-

தவளம் எனும் வடமொழிச் சொல் வெள்ளியைக் குறிக்கின்றது. பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்குண்டு தவித்த துர்வாச முனிவர் இக்குன்றை அடைந்து சிறிது காலம் தங்கினார் என்றும், இங்கு ஒரு கோவில் அமைத்துபாலதண்டாயுதபாணியை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்றும் ஸ்தல வரலாறு கூறுகிறது. பொங்கலன்று பூ பறிக்கும் நோன்பு என சுற்றியுள்ள ஊரைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஏராளமாக கூடுவார்கள். சஷ்டி, கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களை கொண்டாடுகின்றனர்.
வெண்ணிற பாறைகளைக் கொண்ட மலை. ஏறிச் செல்ல படிக்கட்டு பாதையும், வாகனங்களில் போகும் பாதையும் உள்ளன. படிக்கட்டு வழியில் இடும்பனை தரிசிக்கலாம். இதனருகே உள்ள சுரங்கப்பாதை வேணுகோபால ஸ்வாமி கோவில் வரை போகிறதாம். மலை மீதுள்ள விநாயகர் அழகான திருவுருவம். வள்ளியும் தெய்வயானையும் கன்னிப் பெண்களாகவே தரிசனம் தருகின்றனர். இவர்களுக்கு பாவாடை சாத்துபடிதான். பிரதான கருவறையில் மூலவராக எழுந்தருளியுள்ள பாலதண்டாயுதபாணியின் திருவுருவம் அழகுக்கு அழகு சேர்க்கும் குழந்தை வடிவமாக இருக்கிறது. தரிசிக்க மனம் லேசாக பறக்கிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.