அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோவில் (சத்தியமங்கலம்)
God Name : ஸ்ரீ வேணுகோபால சுவாமி
வேணுகோபால சுவாமி கோவில்
நாகப்பட்டினம்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ வேணுகோபால சுவாமி கிழக்கே திருமுக மண்டலம்கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
ருக்மணி - சத்யபாமா தேவியர்கள் உடன் உள்ளனர்.
மூல விக்ரஹமும், உத்ஸவ விக்ரஹமும் கண்களையும் மனசையும் விட்டு அகலாத வண்ணம் எழில் தோற்றம் கொண்டுள்ளது. மஹாலக்ஷ்மித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
வலதுபுறமாக ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் அமர்ந்த கோலத்திலும், பின்புறம் ஸ்ரீ கஸ்தூரிரங்கன் புஜங்க சயனக் கோலத்திலும் தரிசனம் தருகின்றனர். சுதர்ஸன சக்ரத்தாழ்வார் மற்றும் யோக நரசிம்மரை சேவிக்கலாம். ஸ்ரீ அய்யப்பனும் சந்நிதி கொண்டுள்ளார்.
மேற்கு பிரகாரத்தில் சகல தோஷங்களை போக்கும் பல்லியின் வடிவம் காணலாம்.
கல்லில் உருவான கருடக் கம்பத்தின் உச்சியில் தாமரை வடிவிலான தீபக்குழியில் தீபம் ஏற்றுகின்றனர். உருள் சக்கரத்தின் மூலம் பதினெட்டு லிட்டர் எண்ணையை தீபக்குழிக்குள் ஏற்றுகின்றனர்.
ஸ்ரீ ஜெயந்தி, வைகுண்ட ஏகாதேசி - சொர்க்கவாசல் திறப்பு ஆகியன சிறப்பாக கொண்டாடுகின்றன. மாதந்திர ரோஹிணி நட்சத்ர நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
ஸ்ரீ ராமாநுஜர், வேதாந்த தேசிகர் ஆகிய மகான்கள் தரிசித்த ஸ்தலம் என்ற பெருமைக்குரியது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.