அருள்மிகு ராஜாசுவாமி திருக்கோவில் (வெள்ளோடு)
God Name : ராஜாசுவாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
சமுதாய நலன்களுக்காக தீயவர்களை எதிர்த்துப் போராடி காயமடைந்து, பகைவர் கையால் மரணமடைய விரும்பாமல் தானே தலையை வெட்டிக் கொண்டு இறந்தார். அதற்கு நன்றிக் கடனாக மக்கள் இவரை காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது.
பிரதான சந்நிதியில் மூலவராக ராஜாசுவாமி எழுந்தருளி அருள் புரிகின்றார். முறுக்கிய மீசையுடன் கம்பீரமான தோற்றத்தில் காட்சி தருகின்றார். பிரம்மாண்டமாக நிற்கும் நான்கு குதிரைகள் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன. இரண்டு ஊஞ்சல்களையும், ஊஞ்சலின் கீழ் 21 கன்னிமார்களையும் தரிசிக்கலாம். முன் மண்டபத்திலுள்ள வலம்புரி விநாயகரையும், சப்த கன்னியர்களையும் வணங்கலாம். நல்ல மங்கையம்மன், உச்சணன், சார்க்கணன், உச்சக்குமார், பெரியண்ணன், நாகர், கோயில் ஐயன், கோயில் ஆத்தாள் ஆகிய பரிவாரத் தேவதைகளையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.