அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவில் (புரசைவாக்கம்)
God Name : ஸ்ரீநிவாசப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
ஸ்ரீ அஹோபில மட ஜீயர், ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள், காஞ்சி மஹா பெரியவர் ஆகிய மடாதிபதிகள் விஜயம் செய்துள்ள கோவில் எனக் கூறப்படுகிறது. திருப்பதிக்கு போக இயலாதவர்கள் இங்கு வந்து சேவிக்கின்றனர். சென்னையிலேயே சிறந்த கோவில் என மூன்று முறை பரிசுகள் வாங்கியுள்ள கோவில். திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலின் அபிமான ஸ்தலம் எனக் கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளி அருள் புரிகின்றார். ஏழடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. அலர்மேல் மங்கைத் தாயார் உடன் எழுந்தருளியுள்ளார். யோக நிலையில் காணப்படும் ஸ்ரீ நரசிம்மர் இரண்டு கரங்களை யோக நிலையில் வைத்தும், இரண்டு கரங்களில் சக்கரம் ஏந்தியும் காணப்படுகிறார். ஆண்டாள், நம்மாழ்வார், உடையவர், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், ஸ்வாமி தேசிகன், சுதர்ஸன ஆழ்வார் ஆகியோரை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.