அருள்மிகு அபிமுக்தீச்வரர் திருக்கோவில் (அரையபுரம்)
God Name : மூலவர்: ஸ்ரீ அபிமுக்தீச்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
திருமால், பிரம்மன், இந்திரன் முதலானோர், திரிபுரங்களை எரித்த அம்புகளைத் தேடிக் கொண்டு வர, கிராத வடிவில் சிவபெருமான் அவர்களை எதிர் கொண்டழைத்த ஸ்தலம் என ஸ்தல வரலாறு.
மூலவர்: ஸ்ரீ அபிமுக்தீச்வரர், அம்பாள்: ஸ்ரீ அபிராமி.
அந்தணர் வீதிக்கு வடகிழக்கே, காவிரியாற்றின் தென் கரையில் அமைந்துள்ள ஆலயம்.
கோவில் மண்டபத்தின் மேற்புறத்தில் - ஹரிஹரபுத்ரனை ப்ருங்கி முனிவர் பூஜிக்கும் காட்சி, புன்னை மரத்தடியில் மார்க்கசகாயர் எனப்படும் புன்னாகவனேஸ்வரர், மற்றும் மூவலூர் ஸ்தல புராணங்கள் ஆகிய காட்சிகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிபவர் ஸ்ரீ அபிமுக்தீச்வரர். மூலவரின் முன்பாக ஸ்ரீ நந்திகேச்வரர் அமர்ந்துள்ளார். ஸ்ரீ அபிராமி அழகே உருவாக எழுந்தருளி தனி சந்நிதி கொண்டுள்ளார்.
பைரவர், சந்திரன், சனீஸ்வரர் ஆகியோரை மண்டபத்தில் தரிசிக்கலாம். பிரகார வலச்சுற்றில் பிள்ளையார், முருகன், மீனாட்சி உடனாய சுந்தரேச்வரர், பிட்சாடனர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
அந்தணர் வீதியின் மேற்கில் உள்ள பெருமாள் கோவிலில் லட்சுமி நாராயணப் பெருமாளை சேவிக்கலாம்.
பஸ் பாதையில் கண் கொடுத்த விநாயகர் கோவிலும், சற்று தள்ளி மேற்கில் சீதளாதேவி மாரியம்மன் கோவிலும் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.