ஆண்டவன் ஆஸ்ரமம் - மடாலயம் (ஸ்ரீரங்கம்)

God Name : -்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

17ஆம் நூற்றாண்டில் திருக்குடந்தை தேசிகரின் சீடரான ஸ்ரீ வழுத்தூர் ஆண்டவன் அவர்களால் நிறுவப்பட்ட மடாலயம். அரங்கனின் திருவடிகளில் அணியும் இரண்டு பாதுகைகளையே பூஜிக்கும் இலச்சினையாகக் கொண்டுள்ளனர். தற்போது இந்த ஆஸ்ரமத்தை அலங்கரிக்கும் மகான் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ரங்க ராமாநுஜ மஹா தேசிகர் ஸ்ரீமுஷ்ணம் எனும் ஸ்தலத்தில் அவதரித்தவர். ஆகம-வேத சாஸ்திரங்களில் பாண்டித்யம் உள்ளவர். சங்கீதம், ஆயுர்வேதம், ஜோதிடம் ஆகியவற்றிலும் வல்லுநர். 1.6.1989ல் சந்யாச ஆஸ்ரமம் பெற்று, இந்த மடத்தை நிர்வகித்து வருகிறார். இந்த ஆஸ்ரமம் கீதா பாஷ்யம், பாதுகா சஹஸ்ரம் ஆகிய நூல்களை எளிய தமிழில் பிரசுரித்துள்ளது. ஸ்ரீரங்கநாத பாதுகா வித்யாலயாவில் வேத ஆகம பாடங்கள் இலவசமாக நடத்தப்படுகின்றன. ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் விஞ்ஞானக் கல்லூரி ஒன்றை ஸ்ரீரங்கத்தில் நடத்துகின்றனர். கேபிடேஷன் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. பாழடைந்த பழைய கோவில்களைப் புதுப்பித்தல், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவித் தொகை, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலி வழங்கி உதவுதல் போன்ற சேவைகளைச் செய்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.