அருள்மிகு வடிவேல் சுப்ரமணியன் திருக்கோவில் (தீர்த்தகிரி)

God Name : வடிவேல் சுப்ரமணியன்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

ராணிப்பேட்டை

Call : +91-

மலையடிவாரத்தில் தீர்த்தகிரி மஹாகணபதி எழுந்தருளியுள்ளார். 415 படிக்கட்டுகளைக் கொண்ட நேர்த்தியான பாதை அமைக்கப்பட்டுள்ளது. வழியில் நாகர் கோவில் ஒன்றும் உள்ளது. மலை மீதுள்ள மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானின் அழகை வர்ணிக்க இயலாது. தேவியர்கள் இருவரும் உடன் உள்ளனர். சந்நிதிக்கு நேர் எதிரே மிகப் பெரிய நாவல் மரம் ஒன்றும் உள்ளது. கோவில் பிரகாரத்தின் எதிரே கன்னிக்கோவில் ஒன்றைக் காணலாம். கன்னிகைகள் மஞ்சள் அரைக்க பயன்படுத்திய கல்லை இன்றும் காணலாம். முருகப்பெருமானின் திருப்பாதங்கள் பதிந்த இடம் மலையின் மீதுள்ளது. காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, அன்னபூரணி, மகாவிஷ்ணு, மகாலட்சுமி, சரஸ்வதி, துர்க்கை ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். 500 ஆண்டுகள் பழமையான இவ்வாலயம் உள்ள மலை மீது வற்றாத நீர்ச்சுனை ஒன்றும் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.