அருள்மிகு சுப்ரமண்யஸ்வாமி திருக்கோவில் (காங்கேயநல்லூர்)
God Name : ஸ்ரீ சுப்ரமண்யஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
செங்கல்பட்டு
Call : +91-
நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் கங்கையில் தவழ்ந்து சரவணப் பொய்கையை அடைந்தது. இதைக் குறிக்க காங்கேயன் என்பர். காங்கேயன் குடி கொண்ட இடம் என்பதால் இவ்வூர் காங்கேயநல்லூர் என்றானது.
கணபதியின் ஆசி பெற்று, த்வஜஸ்தம்பம் மற்றும் மயில் வாகனம் கடந்து, அருணகிரிநாதர் மற்றும் கூப்பிய கரங்களுடன் காணப்படும் வாரியார் ஸ்வாமிகள் ஆகியோரின் திருவுருவங்களை தரிசித்து பின்னர் மூலஸ்தானம் செல்லலாம். மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவர் மற்றும் உற்சவர் மூர்த்தங்களான ஸ்ரீ சுப்ரமண்யரின் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். பிரகார வலத்தில் எண்ணற்ற மூர்த்திகளை தரிசிக்கலாம். விசேஷமாக நவ வீரர்களான வீரவாகு, வீர கேசரி, வீர மகேந்திரன், வீர மகேசன், வீர புரந்தரன், வீர ராக்கா, வீர மார்த்தாண்டன், வீராந்தகன், வீர தீரன் ஆகியோரின் திருவுருவங்கள் அழகாக உள்ளன. சுமித்தரேஸ்வரரும் தரிசனம் தருகின்றார். வாரியார் ஸ்வாமிகளால் உருவாக்கப்பட்ட கோவில். அழகான ரத்னமகுட வைரமுடி செய்து முருகனை அலங்கரித்துள்ளார். சரவண பொய்கை அமைத்துள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.