அருள்மிகு திருநந்தீஸ்வரர் திருக்கோவில் (மணவூர்)

God Name : திருநந்தீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

சிவபெருமானின் ஜடாபாரத்திலுள்ள கங்கை பாதாள மார்க்கமாக இங்குள்ள நந்தி தீர்த்தத்தில் விழுவதாக ஐதீகம். நந்தியம் பெருமான் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, அதில் மூழ்கி, சாபத்தைப் போக்கிக் கொண்டதாக ஐதீகம். அகஸ்தியருக்கு மணக்கோலக் காட்சி காட்டியருளியதால் இவ்வூருக்கு மணவூர் எனப் பெயர் வந்தது.
மூலவர்: திருநந்தீஸ்வரர், அம்பாள்: ஆனந்தவல்லி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் திருநந்தீஸ்வரர். இவருக்கு மணவில் உடையார் சோமநாத தேவர் என்றொரு திருநாமமும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதி. அகஸ்தியருக்கு மணக்கோலம் காட்டியருளியவர். அம்பாள் ஆனந்தவல்லி மிகுந்த வரப்பிரசாதி. தெற்கு பார்த்த சந்நிதி. கணபதி, சுப்ரமண்யர், பைரவர், க்ஷேத்ரபாலகர் மற்றும் கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. சிரித்த முகத்துடன் நடனமாடும் நடராஜப் பெருமானை பார்த்துக் கொண்டே இருக்கலாம். உற்சவ மூர்த்திகள் யாவும் மிகுந்த அழகுடன் காணப்படுகின்றன, குறிப்பாக வில்லேந்திய கண்ணப்ப நாயனாரின் விக்ரகம் அற்புதமானது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.