அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோவில் (பூண்டி)

God Name : மூலவர்: ஊன்றீஸ்வரர், உற்சவர்: சோமாஸ்கந்தர்.

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

மூலவர்: ஊன்றீஸ்வரர், உற்சவர்: சோமாஸ்கந்தர், அம்பாள்: மின்னலொளியம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் ஊன்றீஸ்வரர். வட்ட வடிவ ஆவுடையாருடன் காட்சி தரும் அழகிய திருமேனி. சுயம்பு மூர்த்தம். இவருக்கு ஆதார தண்டேஸ்வரர், வெண்பாக்கநாதர் என்றெல்லாம் திருநாமங்களும் உண்டு. கிழக்கு நோக்கிய சந்நிதி. மூலவர்க்கு முன்னால், மூலவரை பார்த்தபடி, மூடிய கண்களுடனும், ஊன்றிய கோலுடனும் நிற்கின்றார் சுந்தரர். தெற்கு பார்த்த தனி சந்நிதியில், நின்ற திருக்கோலத்தில், எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள் மின்னலொளியம்மை. சதுர் புஜங்களுடன் கூடிய அழகிய திருமேனி. ஒரே இடத்தில் நின்றபடியே, ஸ்வாமி மற்றும் அம்பாளை, ஒருசேர தரிசிக்கும் வகையில், சந்நிதியை அமைத்துள்ளனர். பார்வை போனதால் நிலை குலைந்து தடுமாறிய சுந்தரர்க்கு, ஊன்றுகோல் தந்து உதவிய இறைவன் என்பதால் இவர்க்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர். பார்வை கெட்டு, படலம் படர்ந்த சுந்தரரின் கண்களுக்கு மின்னலாக தோன்றி வழி காட்டிய அம்பாள் மின்னலொளியம்மை என அழைக்கப்படுகிறாள். சிவாலய கோஷ்ட மூர்த்தங்களுள், வித்தியாசமாக காட்சி தருபவர் லிங்கோத்பவர். இவரது திருமேனியில் கூடுதலாக தாழம்பூ காணப்படுகிறது. வலம்புரி விநாயகர், அஷ்ட புஜங்களுடன் கூடிய கால பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். வலக் கொம்பு ஒடிந்த நந்தி பார்க்க அழகாக இருக்கின்றது. முன்பு இருந்த கோவில், தண்ணீரில் மூழ்கி விட்டபடியால், எல்லா சிலைகளையும், கல்வெட்டுக்களையும், பூண்டி எனும் இவ்வூருக்கு இடம் பெயர்த்து எடுத்து வந்து பிரதிஷ்டை செய்துள்ளனர். 1968ல் இந்தக் கோவிலைக் கட்டியதாகக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.