அருள்மிகு பிடாரி பொன்னியம்மன் திருக்கோவில், ஞாயிறு
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் அமர்ந்துள்ள பொன்னியம்மன், திருவக்கரை வக்ரகாளியை நினைவுபடுத்தும் தோற்றத்துடன் காட்சியளிக்கிறாள். ஜ்வாலா மகுடம், கோரைப்பற்கள், வலக்காதில் குண்டலமாக தொங்கும் குழந்தை இவைகளோடு, சர்வாலங்கார பூஷிதையாக தரிசனம் தருகின்றாள்.
அண்ணன்மார் சாமிகளாகிய எழுவரும் வெளிச்சுற்றில் உள்ளனர். பக்கத்திலுள்ள தீர்த்தக் கிணற்றிலிருந்து நீரை அம்மனுக்கு அபிஷேகித்து, அதை பிரசாதமாக உட்கொண்டால் நோய்கள் நீங்கும் என நம்பிக்கை.
'ஹேமம்' என்றால் தங்கம். அம்பிகையின் பெயர் ஹேமாவதி. இதையே கிராமத்து வழக்கில் பொன்னியம்மன் என்கின்றனர். 'பீடை-ஹாரி' என்றால் பீடை/பிணிகளை விரட்டுபவள் எனப் பொருள். இதுவே பிடாரி எனப்படுகிறது.
இந்த அம்மனுக்கு ஆராதனை செய்த பிறகே புஷ்பரதேஸ்வரர் கோவில் திருவிழாக்கள் ஆரம்பிக்கப்படுமாம்.
அசுரனை அழித்த கோபத்தோடு திருவக்கரையில் அமர்ந்தவள், சினம் தணிந்து இங்கு சாந்தமாக அமர்ந்திருப்பதாக பூசாரி தெரிவிக்கின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.