அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், கரளப்பாக்கம்.
God Name : ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
விஜயநகர அரசர் சதாசிவராயரின் புதல்விக்கு பிடித்திருந்த பேயினை, ஸ்ரீ நரசிம்மரின் அனுஷ்டுப் சந்தஸ் மந்திரப் பிரயோகம் செய்து துர்தேவதைகளின் பிடியிலிருந்து 6வது பட்ட ஸ்ரீமத் அழகிய சிங்கர் காப்பாற்றினார். அஹோபிலத்திலிருந்து திரும்பும் வழியில், சுற்றியுள்ள கிராமங்களில் ஆராதனை செய்து இங்கு வந்து வழிபட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. மனநிலை சரியில்லாதவர்கள் பிரார்த்தித்துக் கொண்டால் குணமடைவர். அஹோபில மடத்து ஷஷ்ட பராங்குச யதீந்திர மகாதேசிகன் ஆராதித்த பெருமாள்.
மூலஸ்தான சந்நிதியில் பெருமாள், தாயார், ஆண்டாள் ஆகியோரின் திருவுருவங்களை சேவிக்கலாம். நேர் எதிரே பெரிய திருவடியையும், உள் மண்டபத்தில் 6வது பட்டமான ஸ்ரீமத் அழகிய சிங்கரையும், ஸ்வாமி தேசிகனையும் சேவிக்கலாம். ஸ்ரீ ராமபிரான், சீதா பிராட்டி, லக்ஷ்மணன், பரதன், சத்ருக்கணன் ஆகிய அழகிய திருமேனிகளை தரிசிக்கலாம். நேர் எதிரே சிறிய திருவடியின் சந்நிதி இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.