அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில், ராயபுரம்
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
பிரதான கருவறையில் மூலவரான அங்காள பரமேஸ்வரி கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். பீடத்தில் அமர்ந்திராமல், சிம்மத்தின் மீது அமர்ந்து சிம்மவாகினியாக தரிசனம் தருவது கம்பீரமாக உள்ளது. பீடத்தின் வடிவில் பெரியாண்டவர் எழுந்தருளியுள்ளார். சுற்றுவட்டார மக்களைக் காக்கும் குலதெய்வமாக அங்காள பரமேஸ்வரி விளங்குகிறாள். கோஷ்டத்தில் வீரபத்ர காளி, மகாலட்சுமி, பிராம்மணி, துர்க்கை ஆகிய அம்பிகைகள் காட்சி தருகின்றனர். மகாமண்டப வாசலில் மதுரை வீரனும், பாவாடைராயனும் எழுந்தருளியுள்ளனர். பிரகார வலச்சுற்றில் வரசித்தி விநாயகர், மாணிக்க கணபதி, விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர், வீரபத்ரர், மாகாளி, நடராஜர், பைரவர் மற்றும் நவகிரகங்களை தரிசிக்கலாம். கோவிலின் முன்பாக கல்லில் உருவான மண்டபம் அமைந்துள்ளதால், இப்பகுதிக்கு கல்மண்டபம் என்ற பெயர் வந்தது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.