அருள்மிகு கரிய மாணிக்கப் பெருமாள் திருக்கோவில் (அயனாவரம்)
God Name : ஸ்ரீ கரிய மாணிக்கப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
அயன் எனும் பிரம்மன் பூஜித்ததால் அயன்புரம் எனப் பெயர் பெற்று நாளடைவில் மருவி அயனாவரம் என்றானது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கரிய மாணிக்கப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சதுர்புஜங்களுடன் கூடிய அழகிய திருமேனியுடன் காட்சி தருகின்றார். ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் காட்சி தருகின்றனர். பெருமாளின் உற்சவ திருமேனியும் மிகவும் அழகாக இருக்கின்றது. தாயார் பொற்கொடி தனி சந்நிதி கொண்டுள்ளார். சக்கரத்தாழ்வார், ஆண்டாள் சந்நிதிகளுடன், வைகானஸ ஆகம அர்ச்சகர்களின் குருவாகப் போற்றப்படுகின்ற விகனஸருக்கும் சந்நிதி உள்ளது. இது 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருக்கோவில். இதன் மேல் தளத்தில் மீன் வடிவ சிற்பங்கள் காணப்படுகின்றன. அயன் எனும் பிரம்மன் பூஜித்ததால் அயன்புரம் எனப் பெயர் பெற்று நாளடைவில் மருவி அயனாவரம் என்றானது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.