அருள்மிகு ஐயப்ப சுவாமி திருக்கோவில் (மஹாலிங்கபுரம்)
God Name : ஸ்ரீ ஐயப்ப சுவாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
வேலூர்
Call : +91-
1970ல் சோட்டானிக்கரை தந்த்ரியால் ஸ்தல சுத்தி பூஜை செய்யப்பட்டு கோயில் கட்ட ஆரம்பித்தனர். சென்னையிலுள்ள பல ஐயப்பன் கோயில்களுள் முதலில் தோன்றிய கோயில் இது. செங்கனூரிலிருந்து பஞ்சலோக விக்ரகம் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வந்தனர். 1974ல் கும்பாபிஷேகம் செய்தனர். சபரிமலை தந்திரிகளின் ஆலோசனைப்படி நித்ய பூஜைகளையும், பண்டிகை தின பூஜைகளையும் செய்கின்றனர். திருவாங்கூர் தேவஸம் போர்டினர், சபரிமலை போகும் பக்தர்களுக்காக, இங்கு ஒரு தகவல் மையத்தை நிறுவியுள்ளனர். மதிய வேளையில் அன்னதானம் செய்கின்றனர். சபரிமலை செல்பவர்களுக்கு இருமுடி கட்டிக்கொள்ள உதவுகின்றனர்.
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஜோதி மயமாக ஜொலிக்கின்றார். வலதுபுறம் விநாயகரும், இடதுபுறம் மாளிகாபுரத்தம்மனும் சந்நிதி கொண்டுள்ளனர். விநாயகரை அடுத்து முருகப் பெருமான் தரிசனம் தருகின்றார். மூலஸ்தானத்தில் ஸ்ரீ குருவாயூரப்பன் எழுந்தருளி அருள் புரிகின்றார். பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. அத்தனை அழகான திருவுருவம். கருடன், அனந்தசயன நாராயணன், ஆஞ்சநேயர், நவகிரகங்கள், நாகராஜா ஆகிய சந்நிதிகளும் உண்டு.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.