அருள்மிகு ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோவில் (கோலியனூர்)

God Name : ஸ்ரீ வாலீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

விழுப்புரம்

Call : +91-

வாலி வழிபட்டு பூஜித்ததால் வாலீஸ்வரர் எனப் பெயர் கொண்டார். இவ்வூர் கோவில் நூறு எனப் பெயருற்று, பின்னர் கோவில் புற நல்லூர் எனப் பெயர் கொண்டு, தற்போது கோலியனூர் என்று அழைக்கப்படுகின்றது.
மூலவர்: ஸ்ரீ வாலீஸ்வரர்் அம்பாள்: பெரியநாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ வாலீஸ்வரர். உயர்ந்த பாணமும், மிகப் பெரிய ஆவுடையாருடன் தரிசனம் தரும் அழகிய லிங்கம். வாலி வழிபட்டு பூஜித்ததால் வாலீஸ்வரர் எனப் பெயர் கொண்டார். வாலீசுரமுடைய நாயனார் என்ற பெயரும் உண்டு. மேற்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் பிரஹந் நாயகி எனப்படும் பெரிய நாயகி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். ஜீவ களையுடன் அழகிய நந்தி, பால விநாயகர், பால முருகன், விசாலாட்சி சகிதம் விஸ்வநாதர், மடியில் லட்சுமியுடன் நாராயணர், பைரவர், சூரியன் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஞான உபதேசம் செய்யும் தட்சிணாமூர்த்தி, வள்ளி-தெய்வயானை உடனாய முருகன், இரண்டு காக்கை வாகனங்களுடன் கூர்மாங்க சனீஸ்வரர், சப்த மாதாக்கள், ஐயனார் ஆகிய திருவுருவங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.