அருள்மிகு தாளகிரீஸ்வரர் திருக்கோவில் (பனைமலை)
God Name : ஸ்ரீ தாளகிரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
மூலவர்: ஸ்ரீ தாளகிரீஸ்வரர், அம்பாள்: அஷ்டதளாம்பிகை.
மலை மீது கட்டப்பட்டுள்ள பழமையான ஆலயம். 1008 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். கி.பி. 728ல் ராஜசிம்ம பல்லவனால் ஸ்தாபிக்கப்பட்டது.
மலை ஏறும் வழியில் ஒரு மலைக் குகையில், ஒரு பெரிய பாறையில் துர்க்கையம்மனை வடித்துள்ளனர். சுற்று வட்டாரத்து கிராமத்து மக்கள் வழிபடும் சக்தி வாய்ந்த தெய்வம். ஞாயிறு - ராகு கால பூஜைகள் விசேஷமாக செய்யப்படுகிறது.
மலை மீதுள்ள கோவிலில் சதுர வடிவமான மூலஸ்தானத்தில் மூலவராக தாளகிரீஸ்வரர் எழுந்தருளி அருள் புரிகின்றார். அழகிய லிங்கத் திருமேனி. பின்னணியில் சோமசுந்தரக் கடவுள் காட்சி தருகின்றார். இரண்டு பக்கங்களிலும் பிரம்மா-விஷ்ணு வடிவங்களை தரிசிக்கலாம்.
அம்பாள் அஷ்டதளாம்பிகை எனப்படும் உமா மகேஸ்வரியின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. கணபதி, ஆறுமுகப் பெருமான், நடராஜர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.