அருள்மிகு பஞ்சமுக காயத்ரி திருக்கோவில் (சிதம்பரம்)
God Name : இல்லை
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவள்ளூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் காயத்ரி தேவி மேற்கு நோக்கி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். அழகான ஐந்து திருமுகங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணம் கொண்டு மேலும் அழகு சேர்க்கின்றன. இரண்டு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், இரண்டு கரங்கள் அபய-வரத முத்திரைகளுடனும், மற்ற ஆறு கரங்களில் ஆறு வித ஆயுதங்களுடனும், தாமரை மலர் மீது அமர்ந்து தரிசனம் தருகின்றாள்.
காயத்ரி தேவியின் பாதங்களருகே ஸ்ரீ சக்கரம் உள்ளது. ரத்ன மகுடம் சூட்டி, சந்திர கலாபரணம் அணிவித்து காயத்ரி தேவியை அலங்கரிக்கின்றனர். சந்நிதியின் இரண்டு பக்கங்களிலும் விநாயகப் பெருமானும், முருகப் பெருமானும் எழுந்தருளியுள்ளனர். சந்நிதிக்குள் நந்தியம் பெருமான் அமர்ந்துள்ளார்.
ஒவ்வொரு மாத பௌர்ணமி தினங்களில் விசேஷ பூஜைகளும் ஹோமங்களும் சிறப்புற நடக்கின்றன. 1008 முறை காயத்ரி மந்திர உச்சரிப்பும் செய்கின்றனர். இவளுக்கு சிகப்பு நிற மலர் அலங்காரமும், வடை-பாயாச நைவேத்தியமும் விசேஷமானது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.