அருள்மிகு மாதலீஸ்வரர் திருக்கோவில் (மாதிரிவேளூர்)
God Name : மாதலீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
ஸ்தல வரலாறு: ராம-ராவண யுத்தத்தின்போது, ராமருக்கு உதவியாக இருக்க தனது தேரோட்டி மாதலியை தனது தேருடன் அனுப்பி வைக்கிறான் இந்திரன். இலங்கை செல்லும் வழியில், இவ்வூரில் தேர் சக்கரம் மணலில் சிக்கி நின்று விட்டது. தேர் சக்கரம் சிக்கிய இடத்தில் மணற்குவியலை அகற்றும் பணியிலிருந்தபோது, மணற்குவியலின் கீழ் அழகிய சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. அதை வெளிக்கொணர்ந்து பிரதிஷ்டை செய்தான் மாதலி. இதனால் இவ்விறைவனுக்கு மாதலீஸ்வரர் என்று பெயர் வந்தது. இவ்வூருக்கு மாதிரிவேளூர் என்ற பெயரும் வந்தது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மாதலீஸ்வரர். பெரிய ஆவுடையும் உயர்ந்த பாணமும் கொண்டு கம்பீரமாக காட்சி தரும் அழகிய சிவலிங்க மூர்த்தம். ஸ்வாமிக்கு வலப்புறமாக அம்பாள் சுந்தரநாயகி தனி சந்நிதி கொண்டு எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.