அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் (விளத்தோட்டி)
God Name : பிரம்மபுரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
ஆறு உருவங்களாக தோன்றி ஒரே உருவமாக மாறிய முருகன், குழந்தையாக தொட்டிலில் வளர்ந்த ஸ்தலம் இது. இதனால் இவ்வூரை வளர்தொட்டில் என்று அழைத்தனர். காலப்போக்கில் மருவி விளத்தோட்டி என்றானது. குழந்தை முருகன் கோவில் என்றே பிரபலம்.
முருகன் குழந்தையாக தொட்டிலில் வளர்ந்ததால் இவ்வூர் மக்கள் தங்களின் குழந்தைகளை, பிறந்து 10 நாட்கள் வரை தொட்டிலில் போடுவதில்லை. (தூளியில்தான் போடுகிறார்கள்)
மூலவர்: பிரம்மபுரீஸ்வரர், அம்பாள்: இக்சரஸ நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் பிரம்மபுரீஸ்வரர். ஒளி வீசும் தேஜோ மய லிங்கம்.
அம்பாள் இக்சரஸ நாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். மண்டபத்தில் பிரம்மன் சிவபெருமானை பூஜிக்கும் அழகிய சிற்பம் ஒன்று காணப்படுகின்றது.
ஸ்தல விநாயகரான ஆபத்து காத்த விநாயகரிடம் ஆசி பெற்று வலச்சுற்றை தொடங்கினால் அழகான கோஷ்ட மூர்த்தங்களையும் உற்சவ மூர்த்திகளையும் தரிசிக்கலாம். மூலவரின் சந்நிதிக்கருகே சனீஸ்வரர், பைரவர், சூரியன் ஆகியோர்க்கு சந்நிதிகள் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.