அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக் கோவில் (கருவாழக்கரை)

God Name : இல்லை

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. இடது காலை மடித்து வலது காலை தொங்க விட்டபடி அமர்ந்த கோலத்தில் தரிசனம் தரும் அழகு திருவுருவம். பாசம், சூலம், கட்கம், கபாலம் ஆகியன கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய திருமேனி. உற்சவ காமாட்சியின் விக்ரகம் மிகவும் அழகாக இருக்கின்றது. பிரகார வலச்சுற்றில் பேச்சியம்மன், வீரன், நாகம்மா ஆகியோரை தரிசிக்கலாம். விநாயகர் மற்றும் உற்சவ காமாட்சியின் விக்ரகம் பேரெழில் கொண்டது. காத்தவராயன் தனி சந்நிதி கொண்டுள்ளார். ஆதியில் மாரியம்மனாக வழிபடப்பட்டு, பின் நாளில் காமாட்சி அம்மனாக பூஜிக்கப்பட்டவள். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குல தெய்வமாக இருந்து வழி நடத்துகின்றாள். திருப்பதி - திருச்சானூர் கோவில்களைச் சேர்ந்த பட்டாச்சார்யார்களுக்கு குல தெய்வமாக இருப்பவள். பகல் வேளைகளில் குருக்களும், மாலை நேரங்களில் பூஜாரியும் பூஜை செய்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.