அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோவில் (திருத்தௌிச்சேரி - கோவிற்பத்து)
God Name : பார்வதீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
திருஞானசம்பந்தர் தமது அடியார்களுடன் செல்கையில், 'பரசமய கோளரி வந்தார்' என்று முத்துச் சின்னங்கள் ஊத, அதனைப் பொறுக்க முடியாமல் பௌத்தர்கள் தடுக்க, தேவார திருமுறை எழுதும் அடியவர் பஞ்சாட்சர பதிகத்தைப் பாட, பௌத்தர்களின் தலைவனான புத்தநந்தியின் தலையில் இடி விழும்படி செய்த தலம்.
பௌத்தர்கள் மீண்டும் சாரிபுத்தனைத் தலைவனாகக் கொண்டு தர்க்கம் செய்து தோல்வியுற்று, பிள்ளையாரின் அருளால் சைவ சமயத்திற்கு மாறிய தலம்.
எதிரே தீர்த்தக் குளம் உள்ளது. இது 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்கள் காலத்துக் கோவில். சோழர்கள் புதுப்பித்துள்ளனர்.
மூலவர்: பார்வதீஸ்வரர், அம்பாள்: சக்தியம்மை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் பார்வதீஸ்வரர். பங்குனி மாதம் 13ஆம் தேதியிலிருந்து 10 நாட்களுக்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. அம்பாள் சக்தியம்மை மிகுந்த வரப்பிரசாதி. கோஷ்ட மூர்த்தங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.